அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெறத் தயார்! பா.டெனிஸ்வரன்....


தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்கள் பொருத்தமான நடவடிக்கைகளின் ஊடாக விரைவாகக்  கையாளப்பட வேண்டும் என வட மாகாண போக்குவரத்து துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமது விடுதலையினை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட அவர்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அரசியல் கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாள்விற்கு  செல்ல விரும்பவில்லை என ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால் உண்மை நிலை அதுவல்லவென்றும் தாங்கள் எப்பொழுதும் புனர்வாள்விற்கு செல்ல தயாராக இருக்கின்றோம்.

போராட்டத்தில் சம்பந்தப்படாத ஒருசிலர் தமக்கு புனர்வாழ்வு தேவையில்லை என்றும், தாம் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

இந்த உண்மை நிலைப்பாட்டினை உரிய இடத்திற்கு கொண்டுசெல்லுமாறு தம்மிடன் அரசியல் கைதிகள் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் போது தொடந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் அரசியல் கைதிகள் விரைவாக அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டு, இயல்பு வாழ்விற்கு திரும்புவது அவசியமாகும்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும், போராட்டத்தோடு தொடர்புபடாத பொதுமகன் என்ற அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு கையாளப்படுதல் வேண்டும்,

இதில் போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட அரசியல் கைதிகள் பலர் கைதுசெய்யப்பட்டு  5, 10, 15, 20 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு தற்போதைய அரசு பொதுமன்னிப்பு வழங்க முன்வரவில்லை என்பதும் நாம் எல்லோரும் அறிந்த விடயமாகும்.

அதே நேரம் சட்டத்தின் பால் பிணை விடுவதென்பதும் முடியாத காரியமாக இருக்கின்றது,  கைதிகள் குடும்பங்களோடு மீள இணையவேண்டுமெனில் புனர்வாழ்வு ஒன்றே தற்போது பொருத்தமானதும் அரசினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.

போராட்டத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் கைதுசெய்யப்பட்டு அவர்களும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு பொது மன்னிப்போ, புனர்வாள்வோ அல்லது பிணையோ பொருத்தமற்ற ஒன்றாக காணப்படுவதோடு, இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது வெலிக்கடை, அனுராதபுரம், வவுனியா ஆகிய சிறைகளில் இருக்கும் 04 பெண் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள் என்ற அடிப்படையில் மிக விரைவாக விடுதலை செய்யவேண்டும்.

ஏனெனில் அவர்களோடு உரையாடியவேளை, அவர்கள் அளவுக்கதிகமாக மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதனை உணர முடிகின்றது.

அத்துடன், சிறையில் துன்பங்களை அனுபவித்ததன் வாயிலாக விரக்த்தியின் உச்சநிலைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதனையும், இவர்கள் மட்டில் அரசியல் வாதிகள் கூட, சென்று பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தோடு இருப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.

மேலும் இரண்டு பெண் தமிழ் அரசியல் கைதிகள் தங்களது பிள்ளைகளை நீண்டகாலமாக பார்க்காமல் இருப்பதனால் விரக்த்தியின் உச்ச நிலைக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, 168 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினை தொடர்புகொள்ளவுள்ளேன்.

எனவே, உண்ணாவிரதம் இருக்கும் உறவுகள் தமது உண்ணாவிரதத்தை ஒத்திவைக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெறத் தயார்! பா.டெனிஸ்வரன்.... Reviewed by Author on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.