யாழ்.மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி!
யாழ். மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு நிதி உதவிகளை வழங்க தயாராகவுள்ளது என ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனும் மற்றும் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே ஆகியோருக்கு இடையில் இன்று விஷேட சந்திப்பு இடம்பெற்றது.
வட மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலமைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தினது உதவி பெறும் கொள்கையில் ஒருதூணாக உள்ள அவசர உதவி தேவைப்படும் இடங்களை அபிவிருத்தி செய்தல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்கென ஜப்பான் அரசாங்கத்தினால் 26 மில்லியன் ரூபா நிதியுதவியும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
அதன்படி யாழ் முத்துத்தம்பி மத்திய மகாவித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்விக்கூடம் அமைப்பதற்கும் வகுப்பறைத் தொகுதியின் அபிவிருத்திக்குமென 11.4 மில்லியனும், அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லுரியில் வகுப்பறை கட்டிடத்தொகுதி அமைப்பதற்கு 11.6 மில்லியன் ரூபாவுமாக 26 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தூதுவர் கையெழுத்திட்டார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் வடமாகாண பிரதமசெயலாளர் பத்திநாதன், ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், மற்றும் குறித்த இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி!
Reviewed by Author
on
March 03, 2016
Rating:

No comments:
Post a Comment