ஈழ அகதி தாக்கப்பட்டமைக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழகம் - கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழ அகதி தாக்கப்பட்டமைக்கு பழ.நெடுமாறான் கண்டனம் வெளியிட்டுள்ளார். குபேந்திரன் எனும் ஈழ அகதி பொலிஸ் ஆய்வாளர்களாலும், பொலிஸாராலும் தாக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஈழ அகதிகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், தமிழகத்தை நம்பி தஞ்சமடைந்துள்ள ஈழத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதை தவிர்க்குமாறும், அகதிமுகாமில் தாக்குதல் நடத்தும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை ஈழ அகதிகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், தமிழகத்தை நம்பி தஞ்சமடைந்துள்ள ஈழத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதை தவிர்க்குமாறும், அகதிமுகாமில் தாக்குதல் நடத்தும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழ அகதி தாக்கப்பட்டமைக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
March 17, 2016
Rating:

No comments:
Post a Comment