ஆச்சரியம் ஆனால் உண்மை.....!!! ஒரு குடிமகன் செலுத்த வேண்டிய கடன்தொகை 4 இலட்சத்து 50,000 ரூபாய்: கீர்த்திதென்னகோன்
நாட்டிற்கு ஒரு குடிமகன் செலுத்த வேண்டிய கடன்தொகை 4 இலட்சத்து 50,000 ரூபாய் என ஊழலுக்கெதிரான முன்னணி அமைப்பின் ஏற்பாட்டாளர் கீர்த்திதென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலரும் இன்று அரச நிறுவனங்களில் பணிபுரிவதாகவும், அவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் பலரும் கருத்து வெளியிடுகின்றனர். ஆனால் கடந்த ஆட்சியின் போது, இவ்வாறான அங்கிகள் மற்றும் யுத்த ஆயுதங்களைப் பற்றி யாரும் பேச முன்வரவில்லை என கீர்த்திதென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெறும் ஊழல்கள் பற்றி அவதானத்தை செலுத்தும் போது, கூட்டு எதிர்க்கட்சி போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக இதன்போது, குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நமது நாட்டு வங்கிகளில் அதிகமான மோசடிகள் இடம்பெறுகின்றன. ஆனாலும் அதனுடன் தொடர்புடையவர்கள் இதுவரையிலும் கைதுசெய்யப்படவில்லை தொடர்ந்தும் பதவியில் உள்ளமை கவலைக்குரிய விடயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் குடிமகன் செலுத்த வேண்டிய கடன் தொகை 4 இலட்சத்து 50,000 ரூபாய் என்பது மிகவும் பாரதூரமான விடயம் என தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஒருவர் ஒரு ரூபாவை வருமானமாக பெற்றால் அதனை நாட்டிற்கு இரண்டு ரூபாவாக கடனாக செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக ஊழலுக்கெதிரான முன்னணி அமைப்பின் ஏற்பாட்டாளர் கீர்த்திதென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஆச்சரியம் ஆனால் உண்மை.....!!! ஒரு குடிமகன் செலுத்த வேண்டிய கடன்தொகை 4 இலட்சத்து 50,000 ரூபாய்: கீர்த்திதென்னகோன்
Reviewed by Author
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment