மன்னாரில் இன்னொரு கூட்டுப் புதைகுழியைத் தோண்ட நடவடிக்கை...
மன்னார் திருக்கேதீஸ்வரம் அருகே இன்னொரு கூட்டுப் புதைகுழியைத் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் கூட்டுப் புதைகுழி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுத் தோண்டப்பட்டிருந்தது.
இதன்போது அங்கிருந்து 96 நபர்களுடையது என்று சந்தேகிக்கப்படும் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கூட்டுப் புதைகுழி அருகே இருக்கும் இன்னொரு பாழடைந்த கிணற்றிலும் மனித எலும்புக் கூடுகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மன்னார் மாவட்ட நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் உத்தரவின் பேரில் குறித்த பாழடைந்த கிணறு இம்மாதம் 29ம் திகதி மேலதிக விசாரணைகளுக்காக தோண்டப்படவுள்ளது.
மன்னாரில் இன்னொரு கூட்டுப் புதைகுழியைத் தோண்ட நடவடிக்கை...
Reviewed by Author
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment