அண்மைய செய்திகள்

recent
-

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நபர் மரணம்


ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் - வெலிங்டன் தோட்டப் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

வெலிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பத்மநாதன் என்பவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

வெலிங்டன் தோட்டப் பகுதியின், தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போதே குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உயிரிழந்த நபரின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நபர் மரணம் Reviewed by NEWMANNAR on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.