மிதிபலகையில் பயணித்தவர் பலி
பிபிலை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி-06, பரீனாஸ் வீதியைச் சேர்ந்த இவர் இரு ஆண் பிள்ளைகளின் தந்தையான நவாஸ்கான்(வயது-42) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தானது காத்தான்குடியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஒன்றின் மிதிபலகையில் பயணித்த இவர், மிதிபலகை உடைந்து விழுந்ததன் காரணமாக பஸ்டயருக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதில் மேலும் சில பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் பிரேத அறையில்வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மிதிபலகையில் பயணித்தவர் பலி
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:

No comments:
Post a Comment