அண்மைய செய்திகள்

recent
-

வெகு விமர்சையாக இடம்பெற்ற சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்,,,


மட்டு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றுள்ளது.
மஹா கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகொப்டர் மூலம் கோபுர பூசையில் மலர்கள் தூவப்பட்டுள்ளன.

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

ஆகம பிரவீணர் சிவஸ்ரீ.கு.குகேஸ்வரக் குருக்கள், கிரியா பூசணம் சிவஸ்ரீ.கு.கிருபாகரக் குருக்கள் ஆகியோரது தலைமையில் இந்த பூசைகள் இடம்பெற்றுள்ளன.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் மற்றும் சங்காபிஷேகம் என்பன இடம்பெறவுள்ளன.

இதன்போது, கிராம இளைஞர்கள் பக்தர்களின் நலன் கருதி தாக சாந்தி நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரலாற்றுச் சிறப்புப் பெற்ற வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக நிகழ்வும் நடைபெற்றுள்ளது.





வெகு விமர்சையாக இடம்பெற்ற சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்,,, Reviewed by Author on April 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.