நான்கு ஆறுகள் ஆரம்பிக்கும் நீர்வீழ்ச்சிகளில் நீர் பெருக்கெடுப்பு அதிகரிப்பு!
நாட்டில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழைக் காரணமாக மகாவலி, களனி, களு கங்கை, வளவ கங்கை ஆகிய நான்கு ஆறுகள் ஆரம்பிக்கும் நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுப்பு அதிகரித்துள்ளது.
சிவனொளிபாத மலையின் உச்சியில் ஆரம்பிக்கும் இந்த நான்கு ஆறுகளின் நீர்வீழ்ச்சிகள் என்றுமில்லாத அளவுக்கு தண்ணீரை கொண்டு சேர்த்து வருகின்றன.
பார்ப்பதற்கு அழகான காட்சியாக இந்த நீர் வீழ்ச்சிகளின் நீர் வரத்து காணப்பட்டாலும் ஆறுகளில் பாய்ந்து வரும் தண்ணீர் அவலங்களை ஏற்படுத்தும் அனர்த்தமாக தற்போது மாறியுள்ளது.
நான்கு ஆறுகள் ஆரம்பிக்கும் நீர்வீழ்ச்சிகளில் நீர் பெருக்கெடுப்பு அதிகரிப்பு!
Reviewed by NEWMANNAR
on
May 19, 2016
Rating:

No comments:
Post a Comment