பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் நிவாரணங்களை வழங்க முடியும் - ஜனாதிபதியின் செயலாளர்!
நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக் காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க உதவுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோன் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
ஜனாதிபதியின் ஆலோசனையின்படி இந்த குடும்பங்களுக்கு துரிதமான நிவாரணங்களை வழங்க மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மக்களுக்கு மேலும் நிவாரண உதவிகளை வழங்க பொது மக்கள் முன்வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட செயலகங்களின் நிவாரங்களை சேகரிக்கும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண உதவிகளை வழங்க விரும்பும் மக்கள் அங்கு சென்று குடிநீர், உலர் உணவுகள், பால் மா, குழந்தைகளுக்கான பால் மா, உடைகள் என அத்தியவசியமான பொருட்களை வழங்க முடியும்.
அங்கு கையளிக்கப்படும் நிவாரண உதவிகள் மாவட்ட அரசாங்க அதிபர்களின் நேரடியான கண்காணிப்பின் கீழ் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் நிவாரணங்களை வழங்க முடியும் - ஜனாதிபதியின் செயலாளர்!
Reviewed by NEWMANNAR
on
May 19, 2016
Rating:

No comments:
Post a Comment