அண்மைய செய்திகள்

recent
-

ஊழலை ஒழிப்போம்....


நாட்டில் ஊழலை ஒழிப்பதை எமது அடிப்படைப் பொறுப்பாக நாம் கருதுகிறோம் என ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நேற்று லண்டனின் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட் டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போதே மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்தமைக்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று உலகெங்கிலும் பரவியிருக்கும் ஊழலுக்கெதிராக போராடும் முன்னணியாக எமது உள்ளங்களை இணைப்பதற்கு எடுக்கப்படும் ஒரு விசேட நடவடிக்கையாக இந்த மாநாட்டைக் குறிப்பிட முடியும்.
தற்போது ஊழல், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட ஒரு யுகத்தை இலங்கை கடந்துள்ளது.

இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியாக அந்த ஊழல்மிக்க ஆட்சியிலிருந்தும் அவர்களின் அடிவருடிகளிடமிருந்தும் மீட்சி பெற்றனர். இன்று இலங்கையில் இருபெரும் அரசியல் கட்சிகளுடன் கூடிய ஒரு தேசிய அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.

ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சட்ட ஆட்சியைப் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையிலேயே நாம் மக்கள் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளோம். எனவே நாட்டிலிருந்து ஊழலை ஒழித்துக்கட்டுவதை எமது அடிப்படைப் பொறுப்பாக நாம் கருது கின்றோம் என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிடார்.

முன்னதாக காலை விருந்தில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்திருந்தமை குறிப்பிட த்தக்கது.    

ஊழலை ஒழிப்போம்.... Reviewed by Author on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.