சர்வதேச நாணய நிதியம் முதல்கட்ட கடனுதவியை அடுத்த மாதம் வழங்குகிறது!
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கட்ட கடனுதவி அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட கடனுதவியின் ஒர் கட்டமாக அடுத்த மாதம் 169 மில்லியன் அமெரிக்க டொலர், வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடனுதவியின் ஏனைய பகுதிகள் எதிர்வரும் மூன்றாண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக வழங்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கத் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை வழிகாட்டல்களை இலங்கை எவ்வாறு பின்பற்றுகின்றது என்பதனை மதிப்பீடு செய்ததன் பின்னரே அடுத்த கட்ட கடனுதவிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை குறைத்தல், மூலதனச் செலவைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் முதல்கட்ட கடனுதவியை அடுத்த மாதம் வழங்குகிறது!
Reviewed by Author
on
May 22, 2016
Rating:

No comments:
Post a Comment