அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா பிரேரணையை இலங்கையுடன் இணைந்து செயற்படுத்துவோம் - அமெரிக்கா


இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்தத்துடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் சிறந்த முறையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய , தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் , இந்த உறவுமுறையினைக் கொண்டு இலங்கை இணை அனுசரணை வழங்கிய ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கமானது குற்றச் செயல்களுக்கு பொறுப்பக் கூறல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா பிரேரணையை இலங்கையுடன் இணைந்து செயற்படுத்துவோம் - அமெரிக்கா Reviewed by Author on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.