அண்மைய செய்திகள்

recent
-

பொன்தீவுகண்டல் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு 01 மில்லியன் நிதியொதுக்கீட்டில் பற்றிக் உற்பத்தி நிலையம்...படங்கள் இணைப்பு



வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் 2015 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் (PSDG), மன்னார் மாவட்ட, நானாட்டான்  பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொன்தீவுகண்டல் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு பற்றிக் துணிகள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதற்க்கான உபகரணங்களுக்கு ரூபாய் 01 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. அவ் உபகரணங்களை உத்தியோகபூர்வமாக அச் சங்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வு 29-04-2016 வெள்ளி மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு பொன்தீவுகண்டல் பங்குத்தந்தை, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், நானாட்டான் உதவி பிரதேச செயலாளர் திருமதி.பிரசாந்தி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அக்கிராமத்து மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.















பொன்தீவுகண்டல் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு 01 மில்லியன் நிதியொதுக்கீட்டில் பற்றிக் உற்பத்தி நிலையம்...படங்கள் இணைப்பு Reviewed by Author on May 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.