அண்மைய செய்திகள்

recent
-

பாலியல் துஷ்­பி­ர­யோக வழக்­கி­லி­ருந்து வில­கு­மாறு யுவ­தியை வற்­பு­றுத்­திய நபர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல்

கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான வழக்கு ஒன்­றுடன் தொடர்­பு­பட்ட முறைப்­பாட்­டா­ள­ரான யுவ­தி­யினை வழக்­கி­லி­ருந்து வில­கு­மாறு வற்­பு­றுத்­திய கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் தலைவர், செய­லாளர், பொரு­ளாளர் ஆகி­யோரை எதிர்­வரும் 6ஆம் திகதி வரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கிளி­நொச்சி நகரை அண்­மித்த பகு­தியில் யுவதி ஒரு­வரை திரு­மணம் செய்­வ­தாக தெரி­வித்து யுவ­தியை ஏமாற்­றிய ஒரு­வரும் அவரின் துணை­யுடன் குறித்த யுவ­திக்கு பாலியல் தொல்லை கொடுத்த யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த விடுதி உரி­மை­யாளர் உட்­பட நான்கு பேரை கடந்த மாதம் கைது­செய்த கிளி­நொச்சிப் பொலிஸார் குறித்த நபர்­களை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அத­னுடன் தொடர்­பு­பட்ட இரண்டாம் மூன்றாம் சந்­தே­க­ந­பர்­களை பிணையில் செல்­லு­மாறும் முதலாம் மற்றும் நான்காம் சந்­தே­க­ந­பர்­களை கடந்த புதன்­கி­ழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் கடந்த புதன்­கி­ழமை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிணையில் சென்ற இருவர் உட்­பட நான்கு பேரையும் கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் நீதி­பதி ஏ.ஏ.ஆனந்­த­ராஜா முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட முறைப்­பாட்­டாளர் மன்றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார். இதன்­போது மன்றில் குறித்த முறைப்­பாட்­டா­ள­ரான யுவதி, குறித்த வழக்­கி­லி­ருந்து தன்னை வில­கு­மாறு கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் தலைவர், செய­லாளர், பொரு­ளாளர் ஆகியோர் அச்­சு­றுத்­தி­ய­தாக சட்­டத்­த­ர­ணி­யூ­டாக தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் அச்­சு­றுத்தல் விடுத்த குறித்த மூவ­ரையும் உட­ன­டி­யாக கைது செய்து நேற்­று­முன்­தினம் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறு கிளி­நொச்சி பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு நீதி­பதி கட்­ட­ளை­யிட்­டி­ருந்தார். இத­னைத்­தொ­டர்ந்து குறித்த மூவரும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நேற்­று­முன்­தினம் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் தலைவர், செய­லாளர், பொரு­ளாளர், மற்றும் வழக்­குடன் தொடர்­பு­பட்ட முதலாம் நான்காம் சந்­தேக நபர்கள் ஆகி­யோரை எதிர்­வரும் 6ஆம் திகதி வரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி ஏ.ஏ.ஆனந்­த­ராஜா உத்த­ர­விட்டார்.

குறித்த யுவ­திக்கு இடம்­பெற்ற சம்­ப­வமா­னது மிகவும் பார­தூ­ர­மான ஒரு சம்­ப­வ­மாகும். எனவே இத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அதற்­கான தண்­ட­னை­களை எதிர்­கொள்­வார்கள்.

இந்த வழக்கை அவ­தா­னிக்கும் போது தொடர்ந்தும் இத­னுடன் தொடர்­பு­பட்ட பலரைக் கைது­செய்ய வேண்­டி­யுள்­ளது. இவ் வழக்­கினைக் கொண்டு நடத்­து­வ­தற்கு பல இடை­யூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன என நீதி­பதி தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்கது.
பாலியல் துஷ்­பி­ர­யோக வழக்­கி­லி­ருந்து வில­கு­மாறு யுவ­தியை வற்­பு­றுத்­திய நபர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல் Reviewed by NEWMANNAR on May 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.