6,000 பேர் கடும் குளிரில் நிர்வாண கோலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி ஒன்றுகூடல்
கொலம்பியாவைச் சேர்ந்த 6,000 பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
அவர்கள் 7 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர்.
அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை கிளர்ச்சியாளர்களுடன் சமாதான உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையிலேயே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பொகோட்டாவில் கடந்த 6 வருடங்களில் இடம்பெற்ற மாபெரும் நிர்வாண ஒன்றுகூடல் நிகழ்வாக இது உள்ளது.
6,000 பேர் கடும் குளிரில் நிர்வாண கோலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி ஒன்றுகூடல்
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment