அண்மைய செய்திகள்

recent
-

பாலத்தில் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்து (ஒருவர் பலி; இருவர் படுகாயம்)

வட்டக்கச்சியில் மோட்டார் சைக் கிளொன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியான துடன் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டக்கச்சியில் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் பன்னங்கண்டியில் இருந்து வட்டக்கச்சி நோக்கி நான்கு பேருடன் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று வட்டக்கச்சி சுவிற்செண்டர் முகமட் முன்பள்ளிக்கு அருகாமையிலுள்ள பாலம் ஒன்றில் மோதியதில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர் சாந்தபுரம் அம்பாள் நகரை சேர்ந்த 28 வயதான துரைராசா இராமகிஷ்ணன் என கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரது சடலம் கிளி நொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மே திக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலத்தில் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்து (ஒருவர் பலி; இருவர் படுகாயம்) Reviewed by NEWMANNAR on June 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.