அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் சுற்று சூழல் தினம் அனுஸ்டிப்பு....


வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று (03) சுற்றுச்சூழல் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இயற்கை பசளை வகைகள், இயற்கை பூச்சி கொல்லி மருந்துகள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் இயற்கை பசளையில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு சுற்று சூழல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்ததுடன் பயன்தரு மரங்களும் பாடசாலை வளாகத்தில் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஆர். இந்திரராஜா, எம். தியாகராசா, அ. ஜெயதிலக மற்றும் விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுற்று சூழல் தினம் அனுஸ்டிப்பு.... Reviewed by Author on June 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.