அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி!


இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தருவதாக உறுதியளித்துள்ள 1.5 பில்லியன் டொலர்களில் முதல் கட்ட நிதி விரைவில் வழங்கப்படவுள்ளது.

நேற்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தில் நிறைவேற்று சபை இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை பொருளாதார மீளமைப்பு கடனாக மூன்று வருடங்களுக்கு வழங்க இணக்கம் வெளியிட்டது.

இதன்முதல் தவணைக் கட்டணமாக168 மில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதி விரைவில் இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இந்த நிதியுதவி இலங்கையின் மீளமைப்புக்காகவே வழங்கப்படுவதாக நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

2009ம் ஆண்டிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இலங்கைக்கு மற்றுமொரு கடனாக 650 மில்லியன் டொலர்களையும் சர்வதேச நாணய நிதியம் வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி! Reviewed by Author on June 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.