அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் போராளிகளின் விடா முயற்சி பாராட்டத்தக்கது-வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்-Photos


புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விடா முயற்சியின் பலனாக இன்று வடக்கு மாகாண சபையூடாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய தொழில் உதவிகளை வழங்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சினால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை(7) காலை மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

குறித்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் தொடர்பில் பயனாளிகளிடம் இருந்து அவர்களது தேவைகள் தொடர்பிலான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான உதவித்திட்டம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

அதே வேளை இவ்வாறு கடந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடம் நேரடியாக வினவிய வேளை அவர்கள் இவ் உதவித் திட்டம் மூலம் நாளாந்தம் 500 ரூபாய் தொடக்கம் 1000 ரூபாய் வரையான நிரந்தர வருமானத்தை பெறுவதாகவும் அறியமுடிந்தது.
அந்தவகையிலே இந்த திட்டம் சிறப்பான முறையிலே பயனளித்துள்ளது என்பது எல்லோராலும் அறியப்பட்டுள்ளது.

இத்திட்டம் இவ்வளவு வெற்றியளிக்க முக்கிய காரணம் இத்திட்டத்தின் பயனாளிகளான புனர்வாழ்வு பெற்ற போராளிகளே.அவர்களது விடா முயற்சியே காரணத்தினால் குறித்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு தனது அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டில் வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 43 மில்லியன் ருபாய் நிதியை ஒதுக்கி மேற் குறித்த வகையிலே பயனாளிகள் பதிவு செய்யப்பட்ட வேளையிலே வடக்கு மாகாணம் முழுவதும் மொத்தமாக 12,494 குடும்பங்கள் பதிவு செய்திருந்தனர்.

விசேட தேவைகள் உடையவர்கள் என்னும் அடிப்படையில் 05 மாவட்டங்களிலும் தெரிவுகள் இடம்பெற்றது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் வாழ்வாதார உதவித் திட்டத்தை 860 குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 147 குடும்பங்கள் வீதமும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் 125 குடும்பங்களுக்கும் இத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மீதமாக உள்ள பதிவு செய்த குடும்பங்களுக்கும், கடந்த ஆண்டு பதிவு செய்யத் தவறிய நிலையில் இந்த ஆண்டு பதிவுகளைச் செய்த குடும்பங்களுடன் ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து இறந்த அங்கத்தவர்களின் குடும்பங்களின் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐம்பது ஆயிரம் ரூபாய் வீதம் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

பயனாளிகளின் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பான அவர்களது தெரிவிற்கான விசேட கூட்டம் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும்.

குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கடிப்படையில் விசே-அந்த அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு தொடர்பான விசேட ஒன்று கூடல் மன்னாரில் இன்று(7) மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வெறு பயனாளிகளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் மேற்கொள்ளப்படும்.என அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

-குறித்த விசேட ஒன்று கூடலில் சர்வமதத் தலைவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் பிரத்தியேக உதவியாளர் டி.பி.சிந்தாத்துரை, அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மன்னார் மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.







முன்னாள் போராளிகளின் விடா முயற்சி பாராட்டத்தக்கது-வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்-Photos Reviewed by NEWMANNAR on June 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.