தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படம்)
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வரத்து மீனவர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று வியாழக்கிழமை(9) உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து இலுவைப்படகு (டோலர்) ஒன்றின் மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் 6 இராமேஸ்வரத்து மீனவர்களை கடல் றோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் நேற்று புதன் கிழமை(8) இரவு கைது செய்துள்ள நிலையில் குறித்த மீனவர்கள் 6 பேரூம் உடனடியாக தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் குறித்த 6 இராமேஸ்வரத்து மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை (9) மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் இன்று வியாழக்கிழமை மாலை குறித்த இராமேஸ்வர மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த 6 இராமேஸ்வரத்து மீனவர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உதத்ரவிட்டார்.
இதே வேளை இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த 31 ஆம் திகதி அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி (செவ்வாய்) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
June 09, 2016
Rating:
No comments:
Post a Comment