இலங்கையில் இன அழிப்பு இடம்பெறவில்லை! அமைச்சர் சரத் பொன்சேகா.....
இலங்கையில் இன அழிப்பு ஒன்று இடம்பெறவில்லை. அதனை நிரூபிக்க காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட ஆரம்பமாகியுள்ள நிலையில் அடுத்த வாரமளவில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகள் எவ்வாறு அமைவேண்டும் என்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யுத்தக்குற்றச்சாட்டு குறித்த இராணுவத்தினர் மீது படிந்துள்ள கரைகளை போக்குவதற்கும், இலங்கையில் இன அழிப்பு ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்பதை நிரூபிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த விடயத்தில் காலம் தாமதிப்பது பொய்களை உண்மையாக்கி விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன அழிப்பு இடம்பெறவில்லை! அமைச்சர் சரத் பொன்சேகா.....
Reviewed by Author
on
June 20, 2016
Rating:

No comments:
Post a Comment