அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக செயற்படும் கிராம அமைப்புகளுக்கு உதவிப் பொருட்கள் கையளிப்பு....


மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு ஒரு தொகுதி பொருட்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால், வடமகாண மீன் பிடி போக்கு வரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் வைத்து இன்று(25) குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக இயங்கி வருகின்ற 28 கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு சமையல் பாத்திரங்களை கொண்ட தொகுதிப் பொருட்கள் மற்றும் தளபாட தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் விசேடமாக கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் தையல் பயிற்சி வழங்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு பொருட்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்தனர்.

மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக செயற்படும் கிராம அமைப்புகளுக்கு உதவிப் பொருட்கள் கையளிப்பு.... Reviewed by Author on July 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.