மன்னாரில் மெய்வல்லுநர் பயிற்சி முகாம்-Photos
மன்னார் வலயக்கல்வித்திணைக்களத்தினால் இவ்வருடம் வட மாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ள மாணவர்களுக்கான 3 நாள் மெய்வல்லுநர் பயிற்சி முகாமானது நேற்று சனிக்கிழமை(2) மன்னாரில் ஆரம்பமாகியது.
இப்பயிற்சி முகாமானது நாளை திங்கட்கிழமையுடன்(4) நிறைவடையும்.
நேற்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய குறித்த பயிற்சி முகாமில் 180 மாணவர்கள் பங்கு பற்றினர். இப்பயிற்சிக்குரிய வளவாளர்களாக தேசிய மட்ட சிறந்த பயிற்றுவிப்பாளர்களான திரு தேவேந்திரன் , சொருபன் ,குலதுங்க , ரட்ணசூரிய , லால் சந்திரகுமார , சுசந்த குலரட்ண ஆகியோர் கலந்து சிறந்த பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
மன்னார் வலய உடற்கல்வி ஆசிரியர்கள் உதவியாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
இப்பயிற்சி நெறியானது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் நெறிப்படுத்தலில் உதவிக்கல்விப்பணிப்பாளர் ப.ஞானராஜ் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(03-702016)
இப்பயிற்சி முகாமானது நாளை திங்கட்கிழமையுடன்(4) நிறைவடையும்.
நேற்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய குறித்த பயிற்சி முகாமில் 180 மாணவர்கள் பங்கு பற்றினர். இப்பயிற்சிக்குரிய வளவாளர்களாக தேசிய மட்ட சிறந்த பயிற்றுவிப்பாளர்களான திரு தேவேந்திரன் , சொருபன் ,குலதுங்க , ரட்ணசூரிய , லால் சந்திரகுமார , சுசந்த குலரட்ண ஆகியோர் கலந்து சிறந்த பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
மன்னார் வலய உடற்கல்வி ஆசிரியர்கள் உதவியாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
இப்பயிற்சி நெறியானது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் நெறிப்படுத்தலில் உதவிக்கல்விப்பணிப்பாளர் ப.ஞானராஜ் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(03-702016)
மன்னாரில் மெய்வல்லுநர் பயிற்சி முகாம்-Photos
Reviewed by NEWMANNAR
on
July 03, 2016
Rating:

No comments:
Post a Comment