மத்திய வங்கியின் புதிய ஆளுநர் - ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
ஜனாதிபதியும் புதிய ஆளுநரும் சுமூகமாக உரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய வங்கியின் புதிய ஆளுநர் எதிர்வரும் திங்கட் கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் புதிய ஆளுநர் - ஜனாதிபதி சந்திப்பு!
 
        Reviewed by Author
        on 
        
July 03, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
July 03, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment