அண்மைய செய்திகள்

recent
-

மன்னகுளம் புதுவிளாங்குளத்தை புனரமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை


வவுனியா, புதுவிளாங்குளத்தினை புனரமைத்து சிறுபோக பயிர்ச்செய்கைக்கு உதவி செய்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தால் கடுமையாக பாதிப்படைந்த வவுனியா வடக்கு, மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட புதுவிளாங்குளம் குளத்தின் கீழ் சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும் காணப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டு நியாப் திட்டத்தின் கீழ் இக்குளம் புனரமைக்கப்பட்டிருந்தது. காட்டு யானைகள், மழை போன்றவற்றினால் இதன் குளக்கட்டுப் பகுதிகள் சேதமடைந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றிருந்தது.

ஒப்பந்தகாரர் சீராக வேலை செய்யாமையால் தற்போது அதிக நீரை தேக்க முடியவில்லை என்பதுடன் குளத்தின் வான்பகுதி, கட்டுப்பகுதி என்பனவும் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இதனால் 150 ஏக்கரில் பெரும்போகமும், 50 ஏக்கரில் சிறுபோகமும் செய்ய கூடியதாகவே தற்போது உள்ளது. இதனை புனரமைத்தால் தரிசு நிலமாக உள்ள நிலப்பகுதிகளையும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மன்னகுளம் புதுவிளாங்குளத்தை புனரமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை Reviewed by NEWMANNAR on July 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.