இன்றைய (07-08-2016) கேள்வி பதில்
கேள்வி:−
எனது அன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமான சட்டத்தரணி சுதன் அண்ணா!நான் மட்டக்களப்பு எருவிலிருந்து மதிவதனி!அண்ணா கடந்த மாதம் எனது நண்பர் ஒருவர் புகையிரத "தண்டவாளத்தைக் கடக்கும்போது புகையிரத வண்டியல் அடிபட்டு இறந்து விட்டார். சாலை விபத்தில் மூன்றாம் நபர் காப்புறுதி மூலம் கிளைம் கிடைப்பதுபோல ரயிலில் அடிபட்டு இறப்பவர்களுக்கு மூன்றாம் நபர் காப்புறுதி கிடைக்குமா?
பதில்:−
அன்பான சகோதரியே! பொதுவாக சாலை விபத்தில் மட்டுமே மூன்றாம் நபருக்கான policy பொருந்தும். புகையிரதத்தில் அடிபட்டு இறந்த உங்கள் நண்பருக்கு மூன்றாம் நபர் காப்புறுதி(Insurance)மூலம் கிளைம் கிடைக்காது.தனிநபர் விபத்துக்கான policy உங்கள் நபர் எடுத்திருந்தால் மட்டுமே அவருக்கு கிளைம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இன்றைய (07-08-2016) கேள்வி பதில்
Reviewed by NEWMANNAR
on
August 07, 2016
Rating:

No comments:
Post a Comment