மன்னார் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது-Photos
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழகம் சம்பியனாகி சாதனை படைத்தது.
அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது மன்னார் பொது விளையாட்டரங்கில் சனி மற்றும் ஆகிய இரு தினங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 36 அணிகள் பங்குபற்றின.
நேற்று ஞாயிறு (31) மாலை 5.00 மணியளவில் விடத்;தல்தீவு யுனைற்றட் விளையாமட்டு கழகமும், யோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டு கழகமும் இறுதிப்போட்டியில் மோதின.
போட்டி தொடங்கி 4வது நிமிடத்தில் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழக வீரர் நிதர்சன் தனது முதலாவது கோலையும் இரண்டாம் பாதியில் 6வது நிமிடத்தில் வின்சன் பற்றிக் தனது 2வது கோலையும் போட்டு 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
ஆட்ட வேளையில் யோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக் கழகம் தனக்கு கிடைத்த ஒரு பெனால்டியை தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விறுதிப்போட்டியின் சிறந்த வீரராக விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழக வீரர் நிதர்சனும் சிறந்த கோல் காப்பாளராக விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழக கோள் காப்பாளர் ஜோண் வெஸ்லியும் தொடரின் சிறந்த வீரராக யோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழக வீரர் டெசில் தேவ் அவர்களும் தெரிவாகி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் சம்பியன் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 20000.00 பணப்பரிசும் உதைபந்தும் 2ஆம் இடத்தைப்பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 10000.00 பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் அவர்களால் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
மன்னார் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது-Photos
Reviewed by NEWMANNAR
on
August 01, 2016
Rating:

No comments:
Post a Comment