வெளிநாடு செல்லும் பெண்கள்! கணவர்மாரின் தவறான நடத்தையினால் குடும்பங்கள் சீரழிவு,,,,,
வேலைவாய்ப்புக்களுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதால் குடும்பங்கள் பல சீரழிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா சபையில் தெரிவித்தார்.
பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் கணவன்மார் தகாத உறவுகளில் ஈடுபடுவதால் குடும்பங்கள் சீரழிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்கள் உடல், உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி நாடு திரும்புகின்றனர்.
இந்த நிலைமை மாற்றப்படவேண்டும். இதற்குப் பதிலாக பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
யுத்தம், சுனாமி போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னனுபவமின்றி வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களாக செல்கின்றனர். இதனால் அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட 1,043 வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களூடாக சட்டபூர்வமாகவும், சட்ட பூர்வமற்ற வகையிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இவ்வாறு செல்வர்களில் 0.14 வீதமானோர் தொழில்வாய்ப்பை ஏற்றவர்களாகும்.
இவ்வாறான நிலையில் பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கு உள்நாட்டில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநாடு செல்லும் பெண்கள்! கணவர்மாரின் தவறான நடத்தையினால் குடும்பங்கள் சீரழிவு,,,,,
Reviewed by Author
on
August 13, 2016
Rating:

No comments:
Post a Comment