வடமாகாண முதலீட்டாளர் மாநாடு தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதிருப்தி!
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவித்துள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த நடவடிக்கையானது, மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கத்த்தின் முதலமைச்சரையும், அமைச்சர்களையும் புறக்கணிக்கும் செயல் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாம் இந்த மாநாடு தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அறிவித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜீனோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தாம் அவரை இந்த நிகழ்வுக்கு அழைத்தபோது அதற்கு அவர் மறுப்பு வெளியிடவில்லை என்றும் ரெஜீனோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, 2016ஆம் ஆண்டின் வடமாகாண முதலீட்டாளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண முதலீட்டாளர் மாநாடு தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதிருப்தி!
Reviewed by NEWMANNAR
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment