அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் விசேட மக்கள் சந்திப்பு...


கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் ஏற்பாட்டில் விசேட மக்கள் சந்திபொன்றுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 முதல் 2 மணி வரை கண்டி பேராதெனிய வீதியிலுள்ள இந்து இளைஞர் மன்றத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், கூட்டணியின் உபதலைவரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், கூட்டணியின் உபதலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மலையக அரசியல் தலைமைத்துவங்கள் நுவரெலியா, பதுளை மாவட்டங்களை மையப்படுத்தியே உள்ளன.கண்டி, மாத்தளை, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்கின்ற மலையக மக்கள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.

இன்று அந்த நிலைமையை தமிழ் முற்போக்கு கூட்டணி மாற்றி அமைத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமே இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு என கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.


தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் விசேட மக்கள் சந்திப்பு... Reviewed by Author on August 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.