அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.(Photos&Video)

வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா கடந்த 10 வருடங்களின் பின் மீண்டும் இம்முறை மன்னாரில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நிகழ்வுகள் கடந்த ஆகிய இரு தினங்கள் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைவாக முதல் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் ஆரம்பமானது.

முதலில் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்ட ஒளவையார் உருவச் சிலையினை பிரதம வருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வைபவ ரீதியாக திறை நீக்கம் செய்து திறந்து வைக்க மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மாலை அணிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியில் இருந்து விருந்தினர்கள் மாலை அணிவித்து மங்களகரமான வரவேற்புடன் வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா இடம் பெறும் மன்னார் நகர மண்டபத்தின் அலெக்ஸ்சாண்டர் அலெக்ஸ் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

-இதன் போது பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண அமைச்சர்களான பா.டெனிஸ்வரன்,த.குருகுலராஜா,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன்,வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரெட்ணம்,மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள்,திணைக்களத்தின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.இதன் போது தமிழ்த்தாய் வாழ்த்து,வரவேற்பு நடனம்,கண்டி நடனம்,சிவ தாண்டவம்,மயில் நடனம் ஆகியவை சிறப்பு நிகழ்வுகளாக இடம் பெற்றதோடு,முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.

குறித்த விருது வழங்களின் போது இலக்கியம்,இசைத்துறை,இசை நடனம்,சிந்து நடைக்கூத்து, நாட்டுக்கூத்து, நாடகம் , பரதநாட்டியம், ஓவியம்,கிராமியக்கலை போன்ற துறைகளைச் சோர்ந்த 20 பேர் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சர் விருது மற்றும் பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.குறித்த விருதுகளை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் விருந்தினர்கள் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் சவேரியான் லெம்பேட் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம் பெற்றது.

பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டார்.இதன் போது மன்னார் பாலத்தில் இருந்து பொது மைதான வீதியூடாக பண்பாட்டு பேரணி வருந்தினர்கள் சகிதம் மண்டபத்தை நோக்கிச் சென்றது.

-இதன் போது மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உற்பட பலர் கலந்து கொண்டனர்.இதன் போது இலக்கி வருதுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




















































மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.(Photos&Video) Reviewed by NEWMANNAR on September 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.