அண்மைய செய்திகள்

recent
-

“பிட்டுக்கு மண்சுமந்த பெருமானர்” பாடலை பாடி சபையோரின் பெரும் வரவேற்பை பெற்ற மருதமுனையை சேர்ந்த இஸ்லாமிய பாடகரான மருதமுனை கமால்

“பிட்டுக்கு மண்சுமந்த பெருமானர்” பாடலை பாடி சபையோரின் பெரும் வரவேற்பை பெற்ற இஸ்லாமியர்

மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் இஸ்லாமிய சகோரர் ஒருவர் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரனுக்காக பாடப்பட்ட பிட்டுக்கு மண்சுமந்த பாடலை உணர்வுபூர்வமாக பாடி சபையோரின் பெரும் வரவேற்பினைப்பெற்றார்.

மருதமுனையை சேர்ந்த இஸ்லாமிய பாடகரான மருதமுனை கமால் என்பவர் கிழக்கு மாகாண தமிழ் இலக்கியவிழாவில் நாகூர்கனியின் பாடல் ஒன்றைப்பாடினார்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பாராத வகையில் விடுதலைப்புலிகள் காலத்தில் சாந்தன் இசைக்குழுவினால் இசைக்கப்பட்டு சாந்தனால் பாடப்பட்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் என்ற பாடலை பாடினார்.

இந்த பாடலுக்கு சபையில் பலத்த கரகோசத்தின் மத்தியில் பாடினார். அவரன் பாடலை நிகழ்வின் கலந்துகொண்ட அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.

மதத்தைக் கடந்து இச் சகோதரர் பாடிய பாடல் இன்றைய சூழலில் அதிசயமாகவே பார்க்கப் படுகிறது.

மத இன ரீதியான கருத்துக்கள் கூர்மையடையும் காலத்தில் இவ் உயரிய மனிதரால் இந்துக்கள் பாடலைப் பாடியமை பலத்த புரட்சியாக பார்க்கப் படுகிறது…






“பிட்டுக்கு மண்சுமந்த பெருமானர்” பாடலை பாடி சபையோரின் பெரும் வரவேற்பை பெற்ற மருதமுனையை சேர்ந்த இஸ்லாமிய பாடகரான மருதமுனை கமால் Reviewed by NEWMANNAR on October 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.