முதியோர் தின விளையாட்டுப்போட்டி -2016-Photos
வவுனியா மாவட்ட சமுகசேவைகள் அலுவலகத்தினால் முதியோர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட மட்ட ரீதியில் முதியோருக்கான விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் இன்று 13.10.2016 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது முற்பகல் 9.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணியளவில் மதிய உணவுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
இந்நிகழ்விலே வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர். திரு.செ.ஸ்ரீநிவாசன், வவுனியா வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.பி.விமலேந்திரன் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.க.கலா அவர்களும், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.ளு.சோபனா அவர்களும், வெங்கலச்செட்டிகுள பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.ந.நந்தினி அவர்களும், அபிவிருத்தஉத்தியோகத்தர் திருமதி.ஜி.ஜீவசாந்தி அவர்களும் வவுனியா தெற்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.ந.பாலகுமாரன் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ளு.செல்வமலர் அவர்களும், மாவட்ட சமூக சேவை அலுவலக உத்தியோகத்தர்கள் திரு.கி.வசந்தன், வி.வாணி, செ.றோசானி, பி.பிரகாசினி போன்றோர் கலந்து கொண்டனர்.
மேலும் இப்போட்டி நிகழ்விலே வவுனியா நகர முதியோர் சங்க உறுப்பினர்கள்,தாண்டிக்குளம், பண்டாரிகுளம், கூமாங்குளம், உக்குளாங்குளம் ஆகிய முதியோர்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். விளையாட்டில் கலந்து கொண்ட முதியவர்கள் மிகவும் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் கலந்து சிறப்பித்ததோடு தங்களுடைய ஆளுமைகளை, திறமைகரளயும் விளையாட்டுக்கள் மூலமும் பாடல், ஆடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள். வேகநடை, கிடுகுபின்னுதல், பலுனூதி உடைத்தல், போத்தலில் தண்ணர் நிரப்புதல், சங்கீதக்கதிரை, படல்கள்,முதியவர்களுடைய நடனம் மற்றும் சந்தோசமான அனுபவப்பகிர்வுகள் என்பன சிறப்பாக நடைபெற்றது. ஏறத்தாள 75 முதியவர்கள் பங்குபற்றி சிறப்பித்தமை மகிழ்ச்சியான விடயமாகும்.
முதியோர் தின விளையாட்டுப்போட்டி -2016-Photos
Reviewed by NEWMANNAR
on
October 14, 2016
Rating:
No comments:
Post a Comment