வைத்தியசாலையின் கவனயீனம்! 335ஆயிரம் பவுண்ட்ஸ்களை வெற்றி கொண்ட இலங்கை பெண்!
மாரடைப்பு ஏற்பட்ட தமது கணவருக்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி இலங்கையின் பெண் வைத்தியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அவருக்கு 335ஆயிரம் பவுண்ட்ஸ்களை செலுத்துமாறு பிரித்தானிய மேல்நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
வொட்போட் பொது வைத்தியசாலையில் வைத்திய பயிற்சி ஆலோசகராக பணிபுரியும் குமுது ரூபசிங்கவே இந்த மனுவை தாக்கல் செய்தார் என்று டெய்ஸி மெய்ல் தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையில் பணியாளராக பணியாற்றிய தமது கணவரான 33 வயதுடைய ரொஹான் ரூபசிங்க, மாரடைப்பு காரணமாக 2010ம் ஆண்டு மரணமானார்.
எனினும் வைத்தியசாலையில் கவனஈனம் காரணமாகவே தமது கணவர் மரணமானார் என்று குமுது முறையிட்டிருந்தார்.
தமது கணவரின் மரணம் காரணமாக தமது இரண்டு பிள்ளைகளும் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
வைத்தியசாலையின் கவனயீனம்! 335ஆயிரம் பவுண்ட்ஸ்களை வெற்றி கொண்ட இலங்கை பெண்!
Reviewed by Author
on
November 20, 2016
Rating:

No comments:
Post a Comment