அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பகுதியூடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இருவர் கைது-சுமார் 5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகளும் மீட்பு-படம்



இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவரை இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் சுமார் 5 கிலோ கிராமிற்கு அதிகமான எடை கொண்ட தங்க கட்டிகளை தலைமன்னாருக்கு மேற்கு பகுதியிலுள்ள கடற்பரப்பில் வைத்து மீன்பிடி படகொன்றின் மூலம் கடத்தும் போது கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவரென்றும் மற்றையவர் சிலாவத்துறையைச் சேர்ந்தவரென்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த விசேட தகவலினடிப்படையில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,பெறுமதி வாய்ந்த தங்கக்கட்டிகளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் யாழ்ப்பாணம் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் கடற்பகுதியூடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இருவர் கைது-சுமார் 5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகளும் மீட்பு-படம் Reviewed by NEWMANNAR on November 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.