தம்புள்ளையில் தமிழருடன் தொடர்புடைய புராதன கல்லறைகள் கண்டுபிடிப்பு
தம்புள்ளை – இப்ன்கட்டுவ பகுதியில் புராதன கல்லறைகள் மீட்கப்பட்டுள்ளன.இவை கி.மு 600 ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குரியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவை தமிழர்களுடன் தொடர்பு பட்டவையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.2600 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு விஜயன் வருவதற்கு முன்னர், இந்த கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு மீட்கப்பட்ட மண்பாண்டங்கள் என்பன சோதனை இடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் தமிழர்களுடன் தொடர்புபட்ட பல புராதன சின்னங்களும், பொருட்களும் அழிக்கப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளையில் தமிழருடன் தொடர்புடைய புராதன கல்லறைகள் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
November 07, 2016
Rating:

No comments:
Post a Comment