மாணவர்களிடம் பரிசு வாங்கும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிவித்தல்
பாடசாலை மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்கள் பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இடம் பெறும் ஆசிரியர் தின நிகழ்வுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள்.
எவ்வாறாயினும்,அடுத்த வருடம் முதல் மாணவர்களிடம் இருந்து எந்த பரிசுப் பொருட்களையும் ஆசிரியர்கள் வாங்க கூடாது என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடம் பரிசு வாங்கும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிவித்தல்
Reviewed by NEWMANNAR
on
November 20, 2016
Rating:

No comments:
Post a Comment