மன்னாரில் தொடர் மின் தடை-மக்கள் பாதிப்பு.அரசியல் வாதிகள் அசமந்த போக்கு என மக்கள் விசனம்.Photos
மன்னார் மாவட்டத்தில் கடந்த பல தினங்களாக பகல்,இரவு பாராது தொடர்ச்சியாக மின் தடை ஏற்பட்டு வருகின்றமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும்,அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக மின் தடை ஏற்பட்ட போதும் மன்னார் மின்சார சபை திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மின் தடையை நிவர்த்தி செய்துள்ளனர்.
தற்போது மீண்டும் மன்னார் மாவட்டத்தில் எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி இரவு,பகல் பாராத நிலையில் மின் தடை ஏற்படுகின்றது.
திடீர்,திடீர் என மின் தடை ஏற்படுவதினால் மின் பாவனையாளர்களது பெறுமதி மிக்க மின் உபகரணங்களும் பழுதடைந்துள்ளது.
மேலும் கடந்த 6 ஆம் திகதி இரவு பல மணி நேரங்களாக திடீர் திடீர் என மின்சாரம் தடைப்பட்டதன் காரணத்தினால் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்த நிலையம் ஒன்று தீப்பிடித்துள்ளது.
இதன்காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருட்கள் சேதமடைந்துள்ளதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான பணமும் தீக்கிரையாகியுள்ளது.
-இந்த நிலையில் தொடர்ந்தும் நாளந்தம் பகல் இரவு பாராது மின் தடைப்பட்டுக் கொண்டிருக்கின்றமையினால் எதிர்வரும் மாதம் இடம் பெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் பகல் இரவு பாராது மின் தடை ஏற்படுகின்றமை தொடர்பாக மன்னார் மின்சார சபை மற்றும் யாழ் தலைமை அலுவலகம் போன்றவற்றிற்கு அழைப்பை ஏற்படுத்தினால் உரிய பதில் வழக்குவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் மாவட்டத்தை பிரதி நிதிப்படுத்துகின்ற அரசியல் பிரமுகர்கள்,திணைக்களத்தலைவர்கள் அசமந்தப்போக்குடன் செயற்படாது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் பங்கெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போல் நிஷந்தன்
போல் நிஷந்தன்
மன்னாரில் தொடர் மின் தடை-மக்கள் பாதிப்பு.அரசியல் வாதிகள் அசமந்த போக்கு என மக்கள் விசனம்.Photos
Reviewed by NEWMANNAR
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment