: மன்னாரில் தொடர் மின் தடை - மக்கள் பாதிப்பு.
மன்னாரில் கடந்த சில தினங்களாக பகல்,இரவு பாராது தொடர்ச்சியாக மின் தடை ஏற்பட்டு வருகின்றமையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளன.
மேலும் எதிர்வரும் மாதம் இடம் பெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் பகல் இரவு பாராது மின் தடை ஏற்படுகின்றமை தொடர்பாக மன்னார் மின்சார சபை மற்றும் யாழ் தலைமை அலுவலகம் போன்றவற்றிற்கு வாடிக்கையாளர்கள் அழைப்பை ஏற்படுத்தினால் உரிய பதில் வழக்குவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
: மன்னாரில் தொடர் மின் தடை - மக்கள் பாதிப்பு.
Reviewed by NEWMANNAR
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment