அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழக்கூட்டம் மூன்றாவது தடவையாக இணைத்தலைவர்கள் தலைமையில்.-Photos

மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழக்கூட்டம் மூன்றாவது தடவையாக இன்று திங்கட்கிழமை காலை 10 மணயளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

-இதன் போது அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன்,மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர் தலைமையில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர்களான பா.டெனிஸ்வரன்,பா.சத்தியலிங்கம்,மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா,வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் பிரதேசச் செயலாளர்கள்,அழைக்கப்பட்ட அரச,அரச சார்பற்ற திணைக்களத்தின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தின் கல்வி,சுகாதாரம்,மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், மீன்பிடி,விவசாயம்,வனவள பாதுகாப்பு,சுய தொழில் திட்டங்கள் உற்பட பல்வேறு திட்டங்களின் நிறை,குறைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.


மேலும் மன்னார் மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்லுவதற்கு எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




















மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழக்கூட்டம் மூன்றாவது தடவையாக இணைத்தலைவர்கள் தலைமையில்.-Photos Reviewed by NEWMANNAR on November 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.