அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் தொடரும் வரலாறு காணாத அடைமழை!

நாடெங்கிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் மழை வீழ்ச்சி கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 140 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி எஸ். பிரதீபன் இன்று (22) தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ச்சியாக மழை நீடித்து வருவது.

தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரியிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது.

கடந்த-18 ஆம் திகதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வரை மேற்படி மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 16 திகதி வரை 328.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் தொடரும் வரலாறு காணாத அடைமழை! Reviewed by NEWMANNAR on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.