அண்மைய செய்திகள்

recent
-

வாசிப்பு குறைபாடு உடையவர்களின் நலனை கருத்தில் கொண்டு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார் வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்-📷

வாசிப்பு குறைபாடு உடையவர்களின் நலனை கருத்தில் கொண்டு மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 190 பேரூக்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தட்சனா மருதமடு, பாலம்பிட்டி, கீரிசுட்டான் போன்ற மீள் குடியேற்றக்கிராமங்களைச் சேர்ந்த 190 பேரூக்கு இவ்வாறு வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வடமாகாண சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.

மேலும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ள தையல் பயிற்சி நிலையத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குறித்த பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற யுவதிகளின் பிரச்சினைகள் குறித்து உரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-

(21-11-2016)
📷






📷📷📷📷📷📷📷📷📷📷

வாசிப்பு குறைபாடு உடையவர்களின் நலனை கருத்தில் கொண்டு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார் வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்-📷 Reviewed by NEWMANNAR on November 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.