பிடெல் காஸ்ரோவின் மரணத்தை விழாவாக கொண்டாடிய மக்கள்
கியூபா புரட்சியின் தலைவர் பிடெல் காஸ்ரோ உயிரிழந்த பின்பு அந்த நாட்டில் 9 நாட்களுக்கு துக்கதினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இருந்தாலும் தற்போது அமெரிக்காவின் மியாமி நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் வசிக்கும் கியூபா வம்சாவளி மக்களோ அவரது மரணத்தினை விழாவாக கொண்டாடி உள்ளனர்.
இவரது மரணம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதாவது, சனிக்கிழமையில் இருந்து மியாமி லிட்டில் ஹவானா பிராந்தியத்தை சேர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆடல் பாடல்களுடன் விழாவாக கொண்டாடியுள்ளனர்.
மேலும் பிடெல் காஸ்டோவின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு மியாமி நகரில் தஞ்சம் புகுந்தவர்களே இவ்வாறு விழாவாக கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடெல் காஸ்ரோவின் மரணத்தை விழாவாக கொண்டாடிய மக்கள்
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:


No comments:
Post a Comment