போதைப்பொருட்களுடன் 10பேர் வவுனியாவில் கைது
வவுனியாவில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருள்களை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக 10 பேர் நேற்று(27) தேக்கவத்தை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட பொலிஸ் தேடுதல் பிரிவின் அதிகாரிகள் குழு இந்த சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.
100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 39 வயதான பெண் உட்பட 5 சந்தேக நபர்களும் 10 கிராம் கஞ்சாவுடன் 5 சந்தேக நபர்களும் இந்தச் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனையின் பேரில் இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருட்களுடன் 10பேர் வவுனியாவில் கைது
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 28, 2016
Rating:


No comments:
Post a Comment