அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்துமஸ் பரிசாக குடிமக்களுக்கு ரூ.7800 கோடி வழங்க அரசு உத்தரவு...


பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட குடிமக்களுக்கு ரூ.7800 கோடி வரை நிதியுதவி வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே சமயம், வறுமையில் உள்ள தனிநபர் மற்றும் குடும்பங்களுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்து உதவி வருகிறது.

இத்திட்டமானது முன்னாள் பிரான்ஸ் பிரதமரான லையோனல் ஜோஸ்பின் என்பவரால் கடந்த 1988-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சில விதிமுறைகளின் அடிப்படையில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நடப்பாண்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு அறிவித்துள்ளது. இதனை விரிவாக தற்போது பார்ப்போம்.

சொத்துக்கள் எதுவும் இல்லாமலும், குடும்பத்தில் வேறு உறுப்பினர்கள் இல்லாமலும் தனியாக வசிக்கும் தனிநபருக்கு 152.45 யூரோ வழங்கப்படும்.
குழந்தைகள் இல்லாமல் தனியாக வசிக்கும் தந்தை மற்றும் தாயாருக்கு 228 யூரோ வழங்கப்படும்.
இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் தந்தை மற்றும் தாயாருக்கு 227 யூரோவும், 3 குழந்தைகள் உள்ளவர்களுக்கு 335 யூரோவும் 4 குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு 396 யூரோவும் வழங்கப்படும்.
ஒரு குழந்தையுடன் சேர்ந்து வாழும் பெற்றோருக்கு 274 யூரோவும், 4 குழந்தைகளுடன் சேர்ந்து வாழும் பெற்றோருக்கு 442 யூரோவும் வழங்கப்படும்.
இந்த தொகையானது டிசம்பர் மாதம் இறுதி வரை வழங்கப்படும். மேலும், இந்த நிதியுதவியை பெற எந்த ஆவணத்தையும் அதிகாரிகளுக்கு காட்ட தேவையில்லை.

கிறிஸ்துமஸ் பரிசாக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தால் அரசாங்கத்திற்கு சுமார் 500 மில்லியன் யூரோவிற்கும்(7758,14,86,550 இலங்கை ரூபாய்) கூடுதலாக செலவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்துமஸ் பரிசாக குடிமக்களுக்கு ரூ.7800 கோடி வழங்க அரசு உத்தரவு... Reviewed by Author on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.