அண்மைய செய்திகள்

recent
-

யானை தாக்கி ஒருவர் பலி

வவுனியா நீலியாமோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணியில் மாடு அடைக்கச்சென்ற ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள், பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பறயனாலங்குளம் பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பனங்காமம் பகுதியைச் சேர்ந்த எஸ்.குணசிங்கம் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



யானை தாக்கி ஒருவர் பலி Reviewed by NEWMANNAR on December 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.