வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோர் தின நிகழ்வு.-Photos
விசேட தேவைக்குட்பட்டோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் வவுனியாவில் இன்று விசேட தேவைக்குட்பட்டோர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
முதலாவது கட்டமாக வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விசேட தேவையுடையோர் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பாக வெளிப்படும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளில் விசேட தேவைக்குட்பட்டோருக்கான ஆசனங்களை ஒதுக்கி அவற்றை அடையாளப்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
அதன் பின்னர் வவுனியா நகரம் ஊடாக விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது. விசேட தேவையுடையோரின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாணத்தில் சபை உறுப்பினர் ஜா.ரி.லிங்கநாதன் வடமாகாண சமூக சேவை திணைக்கள உதவிப்பணிப்பாளர் முகுந்தன் மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோர் தின நிகழ்வு.-Photos
Reviewed by NEWMANNAR
on
December 20, 2016
Rating:

No comments:
Post a Comment