அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் கோர விபத்தில் பலியான இரு ஈழத் தமிழர்கள் - பொலிஸார் சந்தேகம்?


கனடாவில் பிக்கறிங்கில் Taunton வீதி மற்றும் Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் குறித்த இளைஞர்கள் பயணித்த Honda மற்றும் Toyota ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நேருக்கு நேர் மோதுண்ட வாகனத்தில் இருந்த இரண்டு ஈழத் தமழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும், குறித்த விபத்தில் சதீஸ் லோகநாதன் என்ற 35 வயதுடைய நபர் மற்றும் அதீஷ் பாலசுப்பிரமணியம் என்ற 21 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் இலங்கை சந்தத்தியை சேர்ந்தவர்கள் என அவர்களின் நண்பர்கள் கூறியுள்ளனர்.


சதீஸ் லோகநாதன்..

லோகநாதன், நல்ல வாழ்க்கை ஒன்று வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றுள்ளார், அவர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்துள்ளார்.

அவரது மனைவியையும் கனடாவிற்கு அழைத்து வந்து இருவருமாக பண சேமிப்பில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சதீஸ் லோகநாதன், Whitbyயில் உள்ள Charley Ronick’s pub இல் கடமை முகாமையாளராக கடமை புரிகின்றார்.

அவரது திடீர் மரணம் தொடர்பில் உலக செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட நேரத்தில் அவருடன் பணியாற்றிய சக தொழிலாளர்கள் கலங்கிப் போயுள்ளனர்.


அதீஷ் பாலசுப்பிரமணியம்..

இதேவேளை, அதீஷ், ஒன்ராறியோ நிறுவனம் பல்கலைக்கழகத்தில் வணிக பட்டம் முடித்துள்ளார் என்றும் அவர் கருணை உள்ளம் கொண்டவராவார்.

இவர் நன்றாக பணிபுரிபவர் என்று அதீஷ் பாலசுப்ரமணியத்தின் சகோதரர் நிரோஜன் கூறியுள்ளார்.


விபத்து..

லோகநாதன் தனது காரின் கட்டுப்பாட்டை இழக்க காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மது பாவனையோ, காலநிலையோ இந்த பாரிய விபத்துக்கு காரணமாக இருக்க இயலாது என "டர்ஹாம்” பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரின் கார்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தால் 1-888-579-1520 மற்றும் 1-800-222-8477 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


கனடாவில் கோர விபத்தில் பலியான இரு ஈழத் தமிழர்கள் - பொலிஸார் சந்தேகம்? Reviewed by Author on December 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.