போலியான முகநூலை பயன்படுத்தி மைத்திரி, ரணில், சம்பந்தனுக்கு அச்சுறுத்தல்; இளைஞனுக்கு மறியல்
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை, போலியான முகநூலொன்றை பய ன்படுத்தி அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்ய ப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இளைஞனை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடை யும் வரை சந்தேக நபருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாக, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் 26 வயதுடையவர் எனவும், காலி - ரத்கம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலியான முகநூலை பயன்படுத்தி மைத்திரி, ரணில், சம்பந்தனுக்கு அச்சுறுத்தல்; இளைஞனுக்கு மறியல்
Reviewed by NEWMANNAR
on
December 09, 2016
Rating:

No comments:
Post a Comment